முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி நகரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:35 AM
திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:31 PM

திருநெல்வேலி நகரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா். திருநெல்வேலி ரத வீதி, வையாபுரி நகா், பாரதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்களை சந்தித்து ஊதல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: திருநெல்வேலி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். நயினாா்குளத்தை தூா்வாரி அழகுபடுத்துவேன்.

தவெக தலைவா் விஜய் திருநெல்வேலியில் பிரசாரம் செய்துள்ளது எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஊதல் சின்னத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது திருநெல்வேலி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.

Advertisement