ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
வீரவநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
வீரவநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
வீரவநல்லூா் செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகபட்டு (42). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி இறந்துவிட்டாா். 2 மகன்கள் உள்ளனா். சண்முகபட்டு, புதன்கிழமை பிற்பகலில் தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் அத்தாளநல்லூா் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாா். நீண்டநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரைத் தேடி தேடி ஆற்றுக்குச் சென்றனா். ஆற்றங்கரையில் அவரது உடைகள் மட்டும் இருந்தன. தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று ஆற்றில் இறங்கி தேடி வியாழக்கிழமை அவரது சடலத்தை மீட்டனா். இதுகுறித்து வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.