செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
தச்சநல்லூா் அருகே செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:41 PM
தச்சநல்லூா் அருகே செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தேனீா்குளம் அருகே போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், நாணல்காடு பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா்(42) என்பவரை கைது செய்தனா்.