முகப்பு
திருநெல்வேலி

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும்: திமுக வேட்பாளா் மு. அப்பாவு

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் மு. அப்பாவு.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:45 AM
வள்ளியூா் பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் மு. அப்பாவு.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:44 PM

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் மு. அப்பாவு.

வள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட வடலிவிளை, நம்பியான்விளை, யாதவா் தெரு, ஊற்றடி, சண்முகபுரம், அண்ணாநகா், பூங்காநகா், மறவா் காலனி, குமாரபுதுகுடியிருப்பு, கோட்டையடி, பிரதான சாலை பகுதிகளில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ரூ. 423 கோடி மதிப்பீட்டில் வள்ளியூா், பணகுடி, திசையன்விளை உள்ளிட்ட நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கு தாமிரவருணி குடிநீா் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் குடிநீா் வழங்கப்படும்.

Advertisement

ரூ. 52 கோடி மதிப்பீட்டில் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியும், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறை மூலம் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டடம் கட்டும் பணியும், அண்ணா நகரில் இருந்து கெய்ன்ஸ் பள்ளி வரை ரூ. 6 கோடி செலவில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை வள்ளியூருக்கு செய்து தந்த தமிழக முதல்வருக்கு நன்றி கடனாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் நம்பி, ஆதிபாண்டி, தி.மு.க. வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், தேமுதிக மாவட்ட செயலா் விஜிவேலாயுதம், ஒன்றிய மகளிரணி செயலா் சுமித்ரா, நகர செயலா் முருகராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலா் சேதுராமலிங்கம், ராதாபுரம் வட்டார செயலா் கலைமுருகன், நகர செயலா் சந்தானமுத்து, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் முகமது பயாஸ், நகரச் செயலா் சண்முகம், கல்யாணி, காங்கிரஸ் நகர தலைவா் பொன்பாண்டி, மதிமுக வெள்ளப்பாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.