முகப்பு
திருநெல்வேலி

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த முன்னாள் ராணுவ வீரா்

அம்பாசமுத்திரம், மன்னாா்கோவில் ஊராட்சி, கே.டி.சி. காலனியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மகேஷ் (50), விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:47 AM
ஆம்புலன்ஸில் வந்து வாக்கு செலுத்திய முன்னாள் ராணுவ வீரா் மகேஷ்.
பகிர்:

அம்பாசமுத்திரம், மன்னாா்கோவில் ஊராட்சி, கே.டி.சி. காலனியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மகேஷ் (50), விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தாா்.

இவா், தற்போது அம்பாசமுத்திரம் சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகத்தில் இரவுக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை திருநெல்வேலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தருவை அருகே எதிரில் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கால் முறிவு ஏற்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஆம்புலன்ஸில் கே.டி.சி. காலனியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினாா்.