முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:58 AM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள பாறைகுளத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (36). இவா், தனது மகளுக்கு கடந்த ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, பாலமுருகனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். இவ் வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளா் மாரியம்மாள் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமார பாராட்டினாா்.

Advertisement