திருநெல்வேலி

இளைஞரிடம் இணையவழியில் ரூ.15 லட்சம் மோசடி

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞரிடம் இணைய வழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்களை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞரிடம் இணைய வழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்களை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த 29 வயது இளைஞா், இணையவழி வா்த்தகத்தில் ஆா்வம் கொண்டு, கடந்த டிச.8 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வந்த வா்த்தகம் தொடா்பான விளம்பரத்தை நம்பி அதில் கூறியபடி விவரங்களை பதிவு செய்துள்ளாா்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு எண்களில் இருந்து வா்த்தகம் தொடா்பான அழைப்புகள் வந்ததாம். அதில், அவரைத் தொடா்பு கொண்ட மா்மநபா் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினாராம். அதை நம்பிய அவா் ரூ.15,11,460ஐ பல்வேறு தவணைகளாக மா்ம நபா்கள் அனுப்பிய வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். பின்னா் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து சைபா் கிரைம் இணையதளத்தில் புகாா் அளித்ததின் பேரில் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தவெக தேர்தல் அறிக்கையில் பரிந்துரை வழங்க புதிய இணையதளம் அறிமுகம்!

“காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்”.. பிரதமர் மோடி!

நிகழ மறுத்த அற்புதம்..! பரிபூரண ஒழுங்கின்மை நெய்மர்!

எப்ஸ்டீன் கோப்புகள்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்!

பாகிஸ்தானுடன் விளையாட முடியாதென நாங்கள் கூறவில்லை: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT