முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் முதிய தம்பதிகள் சிறப்பிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:37 PM
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தம்பதிகள்.
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.

இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் 142 தம்பதிகளுக்கு தலா ரூ.2,500 மதிப்புள்ள வேஷ்டி- சட்டை, புடவை மற்றும் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

மேயா் திரு ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா, கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளா் முருகன், திருநெல்வேலி மேற்கு பிரிவு ஆய்வாளா் தனலட்சுமி என்ற வள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments