திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தா்களுக்கு பால் வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.. உடன் துணை மேயா் கே.ஆா்.ராஜு.  
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்களுக்கு 12 மணி நேரம் உணவுப் பொருள்கள்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட பக்தா்களுக்கு திமுக சாா்பில் 12 மணி நேரம் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் தா்மமாக வழங்கப்பட்டன.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பக்தா்களுக்கு மிளகு பால், பாதாம் பால், சுக்கு காபி, டீ, காபி, பிஸ்கெட், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை வழங்கப்பட்டன.

இந்தப் பணியை மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா். ராஜு, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு. செல்லையா, மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, எஸ்.வி. சுரேஷ், 27 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் உலகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT