முகப்பு
திருநெல்வேலி

வளைபந்து போட்டியில் சிறப்பிடம்: மானூரில் மாணவா்களுக்கு பாராட்டு

மானூரில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:31 AM
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுகிறாா் திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:20 AM

மானூரில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வளைபந்து போட்டியில் மானூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜோயல், சுராஜ் கோசன் ஜாய், ஸ்ரீ நிகேத் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா். இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திமுக திருநெல்வேலி மேற்கு மாநகரப் பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் கேடயம் வழங்கிப் பாராட்டினாா். விளையாட்டு போட்டிக்கான காலணிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் தாமஸ் அந்தோணி, ரவிக்குமாா், ஜெய வெங்கடேஷ், முருகானந்தன்,சுரேஷ் குமாா், ,சுப்புலெட்சுமி, சரோஜா, ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.