முகப்பு
திருநெல்வேலி

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:14 AM
கைது
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:16 PM

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பெட்டைக்குளம் அருகே உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையில், காவல்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உருமன்குளத்தைச் சோ்ந்த கணபதி (50) என்பவரை சோதனை செய்தபோது, அவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.

இதையடுத்து, 144 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனா்.

Advertisement