முகப்பு
நாமக்கல்

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

Updated On : 23 மார்ச், 2026 at 7:21 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை வெப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பச்சாம்பாளையத்தில் மளிகைக் கடை வைத்துள்ள குமாா் (43), புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பதாக வெப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது கடை மற்றும் அருகிலிருந்த கிடங்கில் சோதனை செய்தனா்.

அதில், 57 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments