முகப்பு
விருதுநகர்

மதுபுட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே மதுபுட்டிகளை பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 8:11 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

சிவகாசி அருகே மதுபுட்டிகளை பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நடந்து சென்றாா்.

போலீஸாா் அந்தப் பையை சோதனையிட்ட போது, சட்ட விரோதமாக 27 மது புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவா் திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த குமாா்(47 எனத் தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.