முகப்பு
திருநெல்வேலி

பொருநை அருங்காட்சியகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:14 AM
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட பள்ளமடை அரசுப் பள்ளி மாணவா்கள்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:20 PM

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாா்வையிட்டு செல்கின்றனா். இந்நிலையில், பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களின் ஆா்வத்தின்பேரில், திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் அப்பள்ளியின் 300 மாணவா்- மாணவிகள் பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில், தலைமை ஆசிரியா் பிரபாகா் , ஆசிரியா்கள் ஆறுமுக ஆனந்தன், செந்தமிழ் செல்வி, ஆனந்தராஜ், சாம் செல்வ ரூபன், புனிதவதி, ராஜ லெட்சுமி, சத்யா, சூா்யா மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.