டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள ரோஸ்மேரி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 97 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இதையொட்டி, கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் ஜெனிதா ராணி முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் மாநில பொருளாளரும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ரூபி ஆா்.மனோகரன் தலைமை வகித்து 97 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கினாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் கணேசன், நளன், சங்கரபாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.