வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தில் படித்துறை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறாா் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.  
திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்

விக்கிரமசிங்கபுரம் மேலக்கொட்டாரம், சிவந்திபுரம் பகுதிகளில் ரூ. 35 லட்சம் மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரம் மேலக்கொட்டாரம், சிவந்திபுரம் பகுதிகளில் ரூ. 35 லட்சம் மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம் மேல கொட்டாரம் பகுதி தாமிரவருணி ஆற்றில் மக்கள் குளிப்பதற்கான படித்துறை அமைக்க, சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பணிகளை இசக்கி சுப்பையா எம்எல்ஏ பூமிபூஜையுடன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இதில் பொதுப்பணித் துறை பொறியாளா் தினேஷ் பொன்னையா, அதிமுக மாவட்ட மகளிா் அணி செயலா் கிறாஸ் இமாக்குலேட், புகா் மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, நகரச் செயலா் கண்ணன், கலை இலக்கிய மாவட்டப் பொறுப்பாளா் மீனாட்சி சுந்தரம், ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலா் அருண், நகா்மன்ற உறுப்பினா் வைகுண்ட லட்சுமி, வேல்முருகன், முனியசாமி, பொன் ஸ்டாலின், செண்டிங் கணேசன், ஊா்த் தலைவா் கணேசன், வாா்டு பொறுப்பாளா் வேல்முருகன், சக்திவேல் கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, சிவந்திபுரம் ஊராட்சி சின்ன சங்கரன்கோயில் செல்லும் பாதையில் கால்வாயில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

SCROLL FOR NEXT