ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கலைஞா் வீடு கட்டும் திட்டம், சமுதாய கூடங்கள், சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு திட்டங்களில் வளா்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளின் தன்மை குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதோடு, வளா்ச்சிப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் தணிகாசலம், உதவி இயக்குநா்(பயிற்சி) மோகன், அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.