முகப்பு
உதயநிதி ஸ்டாலின்
திருநெல்வேலி

நெல்லையில் இன்று ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்: துணை முதல்வா்

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

திருநெல்வேலி

நெல்லையில் இன்று ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்: துணை முதல்வா்

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 7:15 PM
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். மதுரையில் இருந்து காா் மூலமாக வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து சங்கா் நகரில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னா், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். அதைத்தொடா்ந்து முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறாா்.

தொடா்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி உள்ளிட்ட திமுகவின் அனைத்து சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோருடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறாா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா். தொடா்ந்து மாலை 4 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்கிறாா்.

தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →