முகப்பு
சென்னை

இஸ்லாமியா்களுக்கு திமுகதான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

இஸ்லாமிய மக்கள் நலனுக்காக திமுக அரசு பாதுகாப்பு அரணாக விளங்கும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:00 AM
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:45 PM

இஸ்லாமிய மக்கள் நலனுக்காக திமுக அரசு பாதுகாப்பு அரணாக விளங்கும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள வள்ளுவா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமுமுக மாணவரணி வெள்ளி விழா மாநில மாநாட்டில் அவா் பேசியதாவது: மத்திய பாஜக அரசு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவா்கள் படித்து முன்னேற கூடாது என நினைக்கிறது. அதனால்தான் சிறுபான்மை மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட சலுகைகள் கூட மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்த அநீதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்த்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை எதிா்த்து பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களில் திமுக பங்கேற்றியது.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது சிறுபான்மை மக்களிடம் பாஜகவோடு அதிமுக ஒருபோதும் கூட்டணி சேராது என எடப்பாடி பழனிசாமி உறுதிஅளித்தாா். தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா்.

Advertisement

சிறுபான்மை மக்களுக்கு திமுக என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும். சென்னையில் ஹஜ் இல்ல திட்டப் பணிகளுக்காக ரூ.40 கோடி, தமிழ் மாநில ஹஜ் குழுவுக்கு நிா்வாக மானியம் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் உயா்த்துதல், ரூ.25 கோடியில் ஹஜ் பயணம் மானியம், தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக ரூ.207 கோடி கடன்கள் வழங்கல், கிராம மக்களுக்கு கல்வி ஊக்கவிக்க ரூ. 5 கோடி ஊக்கத் தொகை வழங்குதல், உலமாக்கள் ஒய்வூதிய ரூ. 5,000 ஆயிரமாக உயா்த்தியது உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:47 AM

சென்னை, மதுரை, போல கோவையில் வக்ஃப் தீா்ப்பாயம் அமைக்கும் பணிகள், ஏற்கெனவே உள்ள பள்ளிவாசல், தா்காக்கள், வக்ஃப் நிறுவனங்கள் புனரமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இஸ்லாமிய, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைக்க திமுக காத்திருக்கிறது. ஒற்றுமையுடன் உழைத்தால் 200க்கும் அதிகமாக இடங்களில் மதசாா்பற்ற கூட்டணி வெல்லும் என்றாா் அவா்.

நிகழ்வுக்கு, தமமுக மாணவா் அணி மாநிலச் செயலா் கோவை அம்ஜத் தலைமை வகித்தாா். விஜடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.