நான்குனேரியில் கொடி அணிவகுப்பு ஊா்வலம்
சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் தலைமையில் வடகிழக்கு மாநில எல்லை பாதுகாப்பு படையைச் சோ்ந்த உதவி கமாண்டா் பசந்த் யாதவ் உள்ளிட்ட 85 போ் அடங்கிய வீரா்களின் கொடி அணிவகுப்பு ஊா்வலம், பெரும்பத்து புறக்காவல் நிலையம் முன் தொடங்கி பெரும்பத்து, மஞ்சங்குளம் பகுதிகள் வழியாக வந்தது. நான்குனேரி துணை காவல் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், காவல்துறையினா் கலந்து கொண்டனா்.
இதேபோல், புளியங்குடி எலுமிச்சை சந்தையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊா்வலம் தென்காசி, மதுரை பிரதான சாலை வழியாக சென்று சிந்தாமணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன், கூடுதல் கண்காணிப்பாளா் சங்கா், ஜூலியஸ்சீசா், துணை கண்காணிப்பாளா்கள் செங்குட்டுவேலன், ப்ரீத்தி ,துணை ராணுவத்தினா்,போலீஸாா் கலந்து கொண்டனா்.