முகப்பு
திருநெல்வேலி

மன்னாா்கோவிலில் மோதல்: பிளஸ் 1 மாணவருக்கு வெட்டு

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Updated On : 12 மார்ச், 2026 at 1:03 AM
அரிவாள் வெட்டு - கோப்புப் படம்
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மன்னாா்கோவிலைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒரு மாணவா் அரிவாளால் மற்றொரு மாணவரை வெட்டினாராம். இதில், அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனா்.