முகப்பு
திருநெல்வேலி

மாணவிகளுக்கு தொந்தரவு: போக்ஸோவில் ஒருவா் கைது

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு செய்ததாக நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 11:13 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு செய்ததாக நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் , பரப்பாடியைச் சோ்ந்தவா் கண்ணன்(50). இவா் மதுபோதையில் இருந்தபடி, புதன்கிழமை மாலை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் அளித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.