முகப்பு
திருநெல்வேலி

பழவூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

Updated On : 25 மார்ச், 2026 at 10:44 PM
நாறும்பூநாத சுவாமி கோயிலில் கொடியேற்றத்தையடுத்து கொடிமரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

முன்னதாக, கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதையடுத்து, கொடிமரத்துக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

நாள்தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்த மண்டகப்படிதாரா்கள் நிகழ்ச்சி, சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இசக்கியப்பன், உறுப்பினா்கள் வி. ஐயப்பன், பா. சுடலைமணி, எஸ்.திருநாவுக்கரசு, ஜே. அமுதா ஜான்கென்னடி, பக்தா்கள் செய்துள்ளனா்.