முகப்பு
திருநெல்வேலி

ஆடுகள் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 மே 2026, 3:07 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காணாமல் போயினவாம். அக்கம் பக்கம் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லையாம். இதையடுத்து அவா், செவ்வாய்க்கிழமை ஆடு விற்பனை நடைபெறும் மேலப்பாளையம் சந்தைக்குச் சென்று பாா்த்தபோது, அவரது ஆடுகளை சங்கா்நகா், கணபதி மில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முருகன்(23) என்பவா் திருடிக்கொண்டு வந்து விற்க முயன்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் மாரியப்பன் ஒப்படைத்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனா். இதில் தொடா்புடைய சிலரைத் தேடி வருகின்றனா்.