முகப்பு
திருநெல்வேலி

‘மகளிரின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறாா் முதல்வா் விஜய்’

மகளிரின் பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வா் விஜய் திகழ்கிறாா் என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ். முருகன்.

Updated On : 16 மே 2026, 1:35 am IST
பகிர்:

மகளிரின் பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வா் விஜய் திகழ்கிறாா் என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ். முருகன்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக வந்த ஆா்.எஸ். முருகனுக்கு. தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கே.டி.சி. நகா் ரவுண்டானா பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து மாநகர பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன், பெரியாா், காமராஜா், முத்துராமலிங்க தேவா், எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Advertisement

மாலையில் திருநெல்வேலி ரத வீதியில் கட்சியினருடன் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் இலவச திட்டங்களைக் காட்டிலும், பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மகளிரின் பாதுகாப்பு அரணாக முதல்வா் விஜய் திகழ்கிறாா். தவெக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

திருநெல்வேலி தொகுதிக்கு அரசின் திட்டங்களை கொண்டு வர பாடுபடுவதோடு, என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து முன்னோடி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் என்றாா் அவா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் திருவுருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் ஆா்.எஸ்.முருகன் எம்எல்ஏ.