விஜய் ராஜிநாமா! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
முதல்வர் விஜய் போட்டியிட்டு ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார்.
பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்குத் தொகுதியில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார்.
Advertisement
தமிழ்நாட்டின் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், கடந்த மே 10 ஆம் தேதி திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் பேரவை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.