முகப்பு
தமிழ்நாடு

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக நினைத்தது! முதல்வர் விஜய் பேச்சு

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் பேசியது பற்றி...

Updated On : 1 ஜூன் 2026, 4:54 pm IST
முதல்வர் விஜய் - TVK
பகிர்:

தமிழ்நாட்டில் திமுக - தவெக இடையேதான் போட்டி என்றும் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக நினைத்ததாகவும் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் கூறினார்.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:

6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள், ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாண வீட்டில்கூட புலம்புகிறார்கள்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் திமுக - தவெக இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடமில்லை.

தேர்தல் முடிவுகள் வந்தபிறகு 5 நாள்கள் திமுக மற்றும் பலரும் நினைத்தார்கள்.

திமுக நம்மை எதிர்க்க, அவமானப்படுத்த, அத்தனையும் நமக்கு நன்மையே.

ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போது செய்திகள் பார்க்கிறார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். இளைஞர்கள் அனைவரும் அரசியல் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்

வாக்களித்த மக்களை தற்குறி என்று சொல்கிறார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்களா? எங்களுக்கு போட்டால் கெட்டவர்களா?

நீங்கள் தற்குறி என்று கூறியவர்கள்தான், அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள், இன்னமும் ஆக்குவார்கள்

மக்களை புரிந்துவைத்திருந்தால் இப்படியெல்லாம் நீங்கள் பேசியிருக்க மாட்டீர்கள் என்று பேசினார்.

summary

CM vijay speech in tiruchy east constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.