திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்?
திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய் செல்லவுள்ளதாகத் தகவல்...
திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய், வரும் திங்கள்கிழமை(ஜூன் 1) அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கல்லூரி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதிக்கும் அவர் இன்னும் செல்லவில்லை.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய், அண்மையில் 2 நாள் பயணமாக தில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தது குறிப்பிடத்தக்கது.