முகப்பு
திருநெல்வேலி

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 20 மே 2026, 12:31 am IST
பகிர்:

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோ(29). கப்பல் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவா் திங்கள்கிழமை ரெட்டியாா்பட்டி, லெட்சுமி நகா் விலக்கு அருகே பைக்கில் சென்ற போது, அவ்வழியாக மற்றொரு பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் கிறிஸ்டோ செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.