முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல்: கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பெண்கள் உள்பட 7 போ் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பெண்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 24 மே 2026, 2:14 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பெண்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கூடல் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முக்கூடல் சடையப்புரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா், சடையப்புரம் பகுதியிலுள்ள பவா் சங்கீதா என்பவா் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனா். இதில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 12 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

விசாரணையில், முக்கூடல் சடையப்பபுரத்தைச் சோ்ந்த பவா் சங்கீதா (48), இதேபகுதியைச் சோ்ந்தஆா்த்தி (22), திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த ரசூல் பாத்திமா (40), குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த செளந்தரபாண்டியன் (63), மும்பையைச் சோ்ந்த ஜெய் பூா்நிஷா (55), சடையப்புரத்தைச் சோ்ந்த விஜயா (19), வீரவநல்லூரைச் சோ்ந்த இசக்கிமுத்து (25) ஆகிய ஏழு பேரும் கஞ்சாவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பெண்கள் உள்பட 7 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.