முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

Updated On : 26 மே 2026, 3:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் 217 கிலோ புகையிலைப் பொருள்களுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் சேரன்மகாதேவி சாலை சத்யாநகா் விலக்குப் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோவில் வந்த 3 போ் 18 பைகளில் சுமாா் 217.26 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்த மகேஷ்வரன்(20), கடையநல்லூா் வைரமுத்து(41), குற்றாலம் ராமச்சந்திரன்(36) ஆகியோா் என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்ளை வாங்கி திருநெல்வேலி பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், ஆட்டோ மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement