சுத்தமல்லி அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
சுத்தமல்லி அருகே கஞ்சா பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே கஞ்சா பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி காவல் நிலைய போலீஸாா் சுத்தமல்லி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த சங்கா் ராஜா (24) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.