ராதாபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம்
ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ தெரிவித்திருந்தாா்.
அதன்படி, ராதாபுரம், பரமேஸ்வரபுரம், இடிந்தகரை, கூடங்குளம், உவரி, நவ்வலடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 350 கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ பெற்றாா்.
Advertisement
Advertisement
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.