தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு வெட்டு: மைத்துனர் கைது

DIN

சாத்தான்குளம் அருகே வியாபாரியை வெட்டியதாக மைத்துனரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர் கா.செல்வராஜ் (54). பனையேறும் தொழிலாளியான இவருக்குச் சொந்தமாக சென்னையில் 33 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அரை கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தைப் பராமரித்து மாதம் ரூ.200 வாடகை தருவதாக கூறியதால் அவரது மனைவியின் சகோதரரான அதே ஊரைச் சேர்ந்த அ.எஸ்தாக்கிடம் இடத்தைக் கொடுத்தாராம்.
பின்னர் அதில் விறகு வைத்து வியாபாரம் செய்து வந்த எஸ்தாக் பேசியபடி வாடகை கொடுக்கவில்லையாம். இந்நிலையில் சென்னையில் இருந்து எஸ்தாக் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இதையறிந்த செல்வராஜ் அவரிடம் சென்று தனது நிலத்துக்கு பேசியபடி வாடகையை தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், அரிவாளால் எஸ்தாக்கை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த எஸ்தாக் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தட்டார்மடம் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிந்து செல்வராஜை சனிக்கிழமை கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT