தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு அலகுகளில் பழுது ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக தொடர்ந்து பழுது ஏற்படுவதால் முழுமையான மின் உற்பத்தி நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி 3ஆவது அலகில் உள்ள கொதிகலனில் பழுது ஏற்பட்டது. அந்த பழுது சரிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே 4ஆவது அலகில் வெள்ளிக்கிழமை பிற்பகலில்  கொதிகலனில் பழுது ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த அலகின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு, பழுதை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 3ஆவது மற்றும் 4ஆவது அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT