தூத்துக்குடி

மணப்பாட்டில் எம்எல்ஏ ஆய்வு

DIN

மணப்பாடு கடற்கரை பகுதியில் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
மணப்பாடு ஆரம்ப எல்லையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், மணவை முன்னேற்ற இயக்கம் சார்பில் குப்பைகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இயக்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு வந்த அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அப்பகுதியை சுகாதாரமாக மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
பின்னர் கடற்கரையில் உள்ள குடிநீர் கிணறுகளை அவர் ஆய்வு செய்தார். அவருடன், ஒன்றிய திமுக செயலர்கள் உடன்குடி பாலசிங், திருச்செந்தூர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வசீகரன், உடன்குடி நகர திமுக செயலர் ஜான்பாஸ்கர், வி.பி.சாரதி, நகரப் பொருளாளர் தங்கம், ஊராட்சி செயலர் இளங்கோ, வழக்குரைஞர் கிருபாகரன் உள்ளிட்டோர் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT