தூத்துக்குடி

பாஜக தெருமுனைப் பிரசாரம்

DIN

மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் விளக்கும் விதமாக உடன்குடி ஒன்றியத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி அருகே முத்துக்கிருஷ்ணாபுரம், அருணாச்சலபுரம், கூழையன்குண்டு,செட்டியாபத்து ஆகிய இடங்களில் நடைபெற்ற தெருமுனைப் பிரசார கூட்டங்களுக்கு ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். பாஜக அரசின் சாதனைகள், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துபாஜக மாவட்டச் செயலர் இரா. சிவமுருக ஆதித்தன் பேசினார்.
இதில், பாஜக நகரத் தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய இளைஞரணித் தலைவர் சதீஷ், ஒன்றியச் செயலர் அய்யப்பன், ஒன்றியப் பொருளாளர் மார்த்தாண்டன், நகர இளைஞரணித் தலைவர் முத்து தர்மலிங்கம், நகர துணைத் தலைவர் ஜவஹர்லால், ஒன்றிய துணைத் தலைவர்கள் சிவந்திவேல், அழகேசன் உட்பட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT