தூத்துக்குடி

மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பொங்கல் விழா

DIN

கோவில்பட்டி வித்ய பிரகாசம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் வித்ய பிரகாசம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை வகித்து, சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து, மாணவர், மாணவிகளுக்கு கரும்பு மற்றும் இனிப்புகளை அலுவலர் வழங்கினார்.  நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா முன்னிலை வகித்தார்.  இதில், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சேர்மராஜன், அய்யப்பசாமி, மாணவர், மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT