தூத்துக்குடி

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

DIN

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சுந்தரராஜ், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள்கள் அனைத்து இடங்களிலும் அதிமுக கொடியேற்றியும், நல உதவிகள் வழங்கியும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது' என முடிவு செய்யப்பட்டது. இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் செல்லத்துரை, மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் நடராஜன், முன்னாள் துணை மேயர் பீ. சேவியர், மகளிரணிச் செயலர் குருத்தாய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT