தூத்துக்குடி

கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

DIN

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டியில், நகர அதிமுக சார்பில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலர் ஈஸ்வரப்பாண்டியன், நகரச் செயலர் ராமர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் பி.வி.சீனிவாசன், மாவட்ட விவசாய அணி இணைச் செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலருமான கடம்பூர் செ.ராஜு, மாநிலப் பேச்சாளர் சிவசங்கரன், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா ஆகியோர் பேசினர்.  
கூட்டத்தில், அதிமுக ஒன்றியச் செயலர்கள் அய்யாத்துரைப்பாண்டியன் (கோவில்பட்டி), செல்வகுமார் (கயத்தாறு), மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலர் துறையூர் கணேஷ்பாண்டியன், நகர மாணவரணிச் செயலர் பாபு, கூட்டுறவு வங்கி இயக்குநர் அலங்காரபாண்டியன், இளைஞர், இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த பழனிகுமார், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலர் ரமேஷ், நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் ஆ.கணேசன், அதிமுக நிர்வாகிகள் கணபதிபாண்டியன், குருநாதன், முருகன், லட்சுமணப்பெருமாள், வெள்ளைத்துரை, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நகரச் செயலர் எஸ்.விஜயபாண்டியன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT