தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் மது ஒழிப்பு பேரணி

DIN

ஆறுமுகனேரி இறையடியார் அந்தோணி  சூசைநாதர் சுவாமி போதை  மறுப்பு மற்றும் மறுவாழ்வு இயக்கம் சார்பாக மது ஒழிப்பு விழிப்புணர்வுப்  பேரணி   நடைபெற்றது.
பேரணியை  ஆறுமுகனேரி பங்குத்தந்தை  டார்வின் அடிகளார் தொடங்கிவைத்தார். இதில் பங்கேற்றோர் மது  ஒழிப்பு  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு கலந்துகொண்டனர்.   பேரணியில் இறையடியார் அந்தோணி சூசைநாதர் சுவாமி போதை மறுப்பு மற்றும் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர் டால்பின், துணைத் தலைவர் அந்தோணி பாப்பு, செயலர் சுவிஸ்டன்,மதுவிலக்கு சபை உறுப்பினர்கள்  மற்றும் பங்கு இறை மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT