தூத்துக்குடி

நலத் திட்ட உதவிகள் அளிப்பு

DIN

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்  நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் பெரியதுரை (கிழக்கு), ரமேஷ்மூர்த்தி (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 48 காங்கிரஸ் தொண்டர்களுக்கும், 48 ஏழை, எளியோருக்கும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கினார். மேலும், அரசுப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் திருப்பதிராஜா, வீரபெருமாள், முத்து, வழக்குரைஞர் மகேஷ்குமார், சண்முகராஜ், சுப்புராயலு, மதி, மாரியம்மாள், ராஜசேகரன், சின்னப்பன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT