ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உப்பளத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குளத்தூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார உப்பளத் தொழிலாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் மூக்கையா, பரமசிவன், பெரியதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். உப்பள நிறுவனங்களில் இருபால் தொழிலாளர்களுக்கும் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். தொழிலாளர் நல, தொழிற்சங்க சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் வேலை இழக்கும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் பொன்ராஜ், ஞானதுரை, மணவாளன், சக்திவேல், காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.