தூத்துக்குடி

இளைஞர் தற்கொலை

DIN

விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பாரில், குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வேம்பார் தென்மயிலை நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் தாமஸ் (37). கார் ஓட்டுநர். திருமணம் தொடர்பாக இவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதில், அவர் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் அவர், வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, சூரன்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT