தூத்துக்குடி

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: உடன்குடி மாணவர் தேர்வு

DIN

உடன்குடி டிடிடிஏ பள்ளி மாணவர், தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவில் 6 மண்டலங்களாக நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில், உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் எம்.பாலஅரவிந்த் பங்கேற்று, இரண்டாவது இடம் பெற்றார். இதன் மூலம் அவர் தில்லியில் நடைபெற உள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
மாணவர் பாலஅரவிந்துக்கு, பள்ளி ஆசிரியர்கள் சார்பில் தங்க மோதிரம் மற்றும் ரொக்கப் பரிசை பள்ளி நலக் குழுத் தலைவர் எஸ்.ஞானராஜ் கோயில்பிள்ளை வழங்கினார். மாணவர் பால அரவிந்த், என்சிசிஆசிரியர் ஐசக் கிருபாகரன் ஆகியோரை, தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT