தூத்துக்குடி

"சமையல் எரிவாயு சிலின்டர்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்'

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலின்டர்களுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலின்டரின் விலை தூத்துக்குடியில் ரூ. 796.50 ஆகவும் கோவில்பட்டியில், ரூ. 795 ஆகவும், கழுகுமலையில் ரூ. 802.50 ஆகவும், கயத்தாறில் ரூ. 798 ஆகவும்,  எட்டையபுரத்தில் ரூ.795 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.811.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல,  பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலின்டரின் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 796.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலின்டரின் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.709.34 எனவும் 1.2.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நுகர்வோர் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலின்டருக்கு (14.2 கிலோ) நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT