தூத்துக்குடி

ஆத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்

DIN

ஆத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமானதையடுத்து, அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர் முடுக்குத் தெரு லட்சுமணன் மகன் விக்னேஷ் (15),  புதுநகர் பெருமாள் மகன் விசாகன் (14),  ராஜு மகன்  ஸ்ரீகாந்த் (14) ஆகிய 3 பேரும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 
செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்த அவர்கள், மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் மாயமாகி விட்டனராம். மாணவர் விக்னேஷ் தனது வீட்டிலிருந்து ரூ. 3 ஆயிரம் கொண்டு வந்ததாகவும்,  அதை வைத்து அவர்கள் வெளியிடங்களுக்கு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பஜாரில் உள்ள சிசிடிவி கேமராவில் 3 பேரும் ஒரே சைக்கிளில் சென்றது பதிவாகி உள்ளது.  இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT