தூத்துக்குடி

கோவில்பட்டியில் தமிழ் வளர்ச்சி திறந்தவெளி கருத்தரங்கு

DIN

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி திறந்தவெளி கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு இம்மாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டியில் தமிழ் வளர்ச்சி திறந்தவெளி கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா தலைமை வகித்தார். நகரச் செயலர் முருகன்,  ஒன்றியச் செயலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தமிழ் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க பொதுச் செயலரும், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன்,  பத்திரிகையாளர் மதுக்கூர் ராமலிங்கம்,  தன்னாட்சி தமிழகம் மொழி ஆய்வாளர் ஆழி செந்தில்நாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 
இதில்,  சிஐடியூ தீப்பெட்டித் தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் கிருஷ்ணவேணி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாண்டி,  அமர்நாத்,  விஜயலட்சுமி,  ராமசுப்பு,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகரக் குழு உறுப்பினர் சக்திவேல்முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT