சாத்தான்குளம் நீதிமன்றத்தில் பார் கவுன்சில் தேர்தல்
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
தேர்தல் அலுவலராக வழக்குரைஞர் ஆட்லிலின் ஜெயசந்திரிகா பணியாற்றினார். மொத்தமுள்ள 44 வாக்குகளில் வழக்குரைஞர் சங்கச் செயலர் சேவியர் சுதாகர் அண்மையில் இறந்ததால் அவரை தவிர மீதி அனைவரும் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தலையொட்டி நீதிமன்றம் முன் டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.