உயர்கல்வி பயில வழிகாட்டும் கருத்தரங்கம்
வீரபாண்டியன்பட்டினத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது.
வீரபாண்டியன்பட்டினத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் கருத்தரங்கம் புனிததோமையார் மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்றது.
பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இதில், மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டும் வகையில் கையேடுகளை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொறியாளர் அணி மாநில துணைச் செயலர் பிரதீப், பள்ளித் தாளாளர் ஆண்ட்ரு டீரோஸ், ஒன்றிய திமுக செயலர் செங்குழி எ.பி.ரமேஷ், மாவட்ட மீணவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொடரிகோ, மாவட்ட துணை அமைப்பாளர்கள் கேடிசி முருகன், ராஜமோகன், ஜெரால்டு, ஜெகதீஸ்வீ.ராயன், ஸ்ரீகாந்த், குருபாஸ்கர், ரெமிசன், ராகவன்பொன்கனகராஜ், ஆனந்த், ஊராட்சி கழக செயலர்கள் ஆனந்ùத்ராட்ரிகோ, இளங்கோ, ரஜூலா, ராசிபாலசுப்பிரமணியன் மற்றும் மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். ஜோசப் பிரதீப் நன்றி கூறினார்.